Sunday, August 2, 2009

மின்னலே நீ வந்ததேனடி - முதல் பயணம் III

"என்னவளே அடி என்னவளே" பாடல் ஒரு இருநூறு முறையாவது ஒலித்திருக்கும்.
பார்க்கும் இடங்களில் எல்லாம் ஒரு அழகு தெரிந்தது. அடுத்தமுறை அவளைக்காண மனம் துடித்துக்கொண்டிருந்தது.

அதற்கான சந்தர்ப்பம் இவ்வளவு விரைவில் அமையும் என்று எதிர்பார்க்கவில்லை.
அம்மாவின் சொந்தத்தில் அண்ணன் மகளின் திருமணம் என்று காங்கயம் அருகே சென்றிருந்தேன்.எனக்கு மாமன் மகள் முறை, ஒரு கல்லூரியில் வேலை மாப்பிள்ளை சொந்த தொழில்.ஒரு மனமாக திருமணத்திற்கு சென்றேன். இரவு அங்கேயே தங்குவதாக முடிவு.

மாலை மண்டபத்திற்கு சென்று உபச்சாரங்களையும், உபத்திரங்களயும் முடித்துக்கொண்டு, ஒருபக்கம் சீட்டாட்டமும் , இன்னொருபக்கம் ஊர்கதையும் சூடு பிடித்திருந்தது. எதற்கு ஓடுகிறோம், எதற்கு துரத்தப்படுகிறோம் என்ற இலக்கே இல்லாமல் சிறுவர்களின் ஓட்டம் சிரிப்புகளுக்கிடையே தொடர்ந்துகொண்டிருந்தது. வெத்தலை பாக்கின் மனம், கலைந்த இரும்பு சேர்கள், அங்ககே ஜமுக்காலம் விரிக்கப்பட்டு அதில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள், மூடி வைக்கப்பட்ட வாத்தியங்கள் இதையெல்லாம் தாண்டி மாடிக்கு (திருட்டு) தம் அடிக்க சென்றேன். என் தம்பிக்கு நான் தம் அடிப்பது தெரியும் என்பதால் அவனும் என் உடன் மாடிக்கு வந்திருந்தான். மாடித்திட்டில் மங்கியிருந்த இருட்டில் நான் தம் அடித்துக்கொண்டே அவனுடன் பேசிக்கொண்டிருந்தேன்.



காட்சிI

சின்ன சின்ன கொலுசு சத்தங்களும் , சிரிபொலிகளும் மாடிப்படி வழியாக நெருங்கிக்கொண்டிருந்தது. சிகரெட்டை அனைத்துவிட்டு அவனிடம் பேச்சைத் தொடர்ந்தேன். நெருங்கிய சத்தங்கள் நின்றுவிட , நின்ற இடத்தை திரும்பிபார்த்தேன். இருட்டிற்கு சிரிப்பொழிகளால் விளக்கேற்றிக்கொண்டிருந்தது ஒரு தேவதைக்கூட்டம். அதில் ஒன்றிரண்டு முகம் எனக்கு பழக்கப்பட்டவைகள்.அதில் ஒருத்தி எப்பொழுதும் என்னிடம் வம்பிழுக்கும் என் அத்தைப்பெண்.



"ஏண்டா, யார்ர இத்தனை பொண்ணுக? நா பார்த்ததுஇல்லையே?"



" எல்லா அக்காவோட ஸ்டூடண்ட்ஸாமா "



"ஹ்ம்ம்ம்"



அங்கிருந்து ஒரு குரல் " டே பாலா இன்னும் தூங்காம இங்கென்னடா பண்ணிடிருக்கே?

நைட்டுல்ல காத்து கருப்பு அடிச்சுரபோகுது, அதுவும் பக்கத்திலேயே இருக்கு" ( சிரிப்பொலி)...



"எல்லா காத்து கருப்பும் இன்னார ஊரவிட்டே ஓடிருக்கும், நம்மளவிட ஒரு ராட்சஷி வந்துட்டானு, நீ பயப்படாதடா பாலா" இது நான்



"போடா குண்டா! இரு நீ தம் அடிக்கிறத அத்தகிட்ட சொல்றே"

"அடிங்க... " என்று அதட்ட, "அடிப்ப அடிப்ப " என்று சொல்லிவிட்டு நகர்ந்தது தேவதைக் கூட்டம்.



காட்சிII



இருட்டிலிருந்து சட்றே வெளிச்சமான பகுதிக்குச் சென்று வட்டமாக அமர்ந்து ஏதோ கதை
தொடங்கியது.



ஒரு நிமிடம் என் கண்களையே நம்ப முடியவில்லை.. நன்றாக தேய்த்துக்கொண்டு மீண்டும் உற்றுப்பார்த்தேன். என் வதனா இங்கே எப்படி?



"டே அக்கா எந்த காலேஜ்ல வொர்க் பண்றாங்க?"

"இந்துஸ்தான் காலேஜ்னா"



சின்ன சின்ன சிரிப்பொழிகள் தொடர அத்தனை பேரும் Out of Focus'ல் செல்லத் தொடங்கினர்.



"ஒரு முறையாவது உன் பார்வையால் தீண்டிவிடு பெண்ணே, மோட்சம் பெருவேன்"
என் மனதிற்குள் ஒலிக்க அவள் பார்வைக்காக தவம் இருந்து மயங்கிபோனேன்.



"உன் பெற்றேரை பார்த்திருக்கிறேன், அவர்கள் மனிதர்கள்தானே நீ மட்டும் எப்படி தேவதையானாய்" என்ற டி.ஆர்.தாசன் கவிதை மனதுக்குள் ஒலிக்க மெல்ல சிரித்துக்கொண்டேன்.

"இரு நான் கொண்டுவரே" என்று சத்தம் கேட்க என்னை பார்த்தவாரு எழுந்து என்னை நோக்கி வந்தாள். இதயம் துடிக்கும் சத்தம் அவள் காலடியில் கேட்டது. என் அருகில் வந்து என்னைக் கடந்துசென்று, பாலாவை பார்த்து தலையாட்டிவிட்டு படியில் இறங்கிச் சென்றால்.

" அடச் சே என்னப் பார்த்து சிரிக்கிலயா" என நொந்துகொண்டேன்.

பாலாவை கிழே தாட்டிவிட்டு படிதிரும்பும் இடத்தில் அவளின் வருகைக்காக காத்திருந்தேன்.



"10த் நல்லா படி பாலா"...."ஹ்ம்ம்ம்"



காட்சிIII



இது நிச்சயம் அவள் குரல்தான். மாடிகளில் ஏறி என்னை நெருங்கும் போது



"ஹாய்" என்றேன்.

லேசாக முறைத்தபடி என்னைத் தாண்டி நகர்ந்தால்.



" என்னங்க எதும் பேசாம போறீங்க"



" என்ன பேசசொல்லறீங்க"



" என்ன நியாபகம் இல்லையா?" அன்னிக்கு....



"ஹ்ம்ம்ம் நல்லா தெரியுமே"



"கோபமா?"



கோபத்துடனே "இல்லை" என்றால்..

" பார்த்தா கோபம் இல்லாத மாதிரி தெரியலையே..."



"அதெல்லா ஒண்ணு இல்லை" சொல்லியவாரே படியேரத்தொடங்கினால்...

"காதலென்றால் பெரும் அவஸ்த்தையென்று உன்னை கண்டதும் கண்டுகொண்டேன்"
பாடியதற்கு பதிலே இல்லாமல் சென்றுவிட்டால்...



இரவு முழுவதும் உறக்கம் இல்லாமல் அவளின் நினைவு மட்டுமே...காலையில் காதலை சொல்லிவிடுவதென்று முடிவில்... கனவுகளுக்காகவே உறக்கத்திற்கு சென்றேன்.

-------------------------------------------------------------------------------------------------

மேலே சொன்ன அதே காட்சிகளின்போது வதனாவின் பார்வையிலிருந்து...



காட்சிI

"ஹே இவனத் தாண்டி சொன்னே... அன்னைக்கு வீட்டுக்கு வந்து... இவனேதாண்டி"



காட்சிII

சென்று அமர்ந்த பிறகு...



என் அத்தை பெண்ணிடம் நான் யார் என்பதைப் பற்றிய மறைமுக விசாரனைகள்.

மெதுவான சீண்டல்கள்.



"ஹே உன்னத் தாண்டி பாக்குரா..."



"புடிச்சுருக்குனு சொன்னியே. போய் பேச வேண்டியதுதானே..."



" நீ அவன பாக்காத"



"கொஞ்ச நேரம் பொறு"



"அவங்கிட்ட பேசர மாதிரி போய் கிழே போய்ரு"



"ஹ்ம்ம்ம்"



காட்சிIII

என்னிடம் பேசிவிட்டு ( தூண்டிவிட்டு) சென்றபிறகு...



"என்னடி ? எதாவது சொன்னானா?"



"ஐயா, யாரும் கவனிக்கமாட்டோனு நெனச்சு படியிலேயே நின்னிட்டிருந்தாரு..."

"இருடி! நீ சொல்லு என்ன சொன்னா?"

"ஒன்னு சொல்லல, என்ன தெரியுமானா? எதோ சொல்ல வந்தா முறைச்சே! அப்படியே பாட்டா மாத்திட்டா"

"ஹ்ம்ம்ம் ... பாக்கலா நாளைக்காவாது எதாச்சு சொல்லரானானு"


"ஹேஏஏ சும்மா இருடி, வேறே எதாவது பேசு" வதனா



"ஹ்ம்ம் இதவிட வேற என்னடி இன்னிக்கு இருக்கு"



"அதானே... இன்னிக்கு உன்ன சும்மா விட்டுறுவோமா"

".................." பேச்சு நீண்டு கொண்டே ஒவ்வொருவராக உறங்கச்சென்றனர்...

விடியலுக்காக காத்திருந்தது விடியலும்... எனது காதலும்...



--------------------------------------------------------------------------------------------------------------------------------


திருமணம் என்பதால், விடிவதற்கு முன்பே எல்லாரும் தயார் ஆகிக்கொண்டிருந்தனர். நானும் எழுந்து தயாரகிக்கொண்டிருக்கும் போது, என் அத்தை பெண்ணிடம் இருந்து இரவு அவர்களுக்குள் நடந்த எல்லா உறையாடல்களும் என்னை வந்து சேர நான் கொஞ்சம் உசார் ஆனேன்.
மன‌ம் ஆகாயாத்தை நோக்கி துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது.பல பழைய காதல் பாடல்கள் என் மனதிற்குல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. அவளின் வருகைக்காக காத்திருந்தேன். மனம் கவிதை பாட துவங்கியது.
இதோ என் எதிரில் பொன் வண்ண‌ சுடிதாருடன்,


" உன் பாதம் நோகப் போகுதடி,
பூக்களை மிதிக்காதே,

தென்றலும் புயல் வலி தருமோ?
உன்னைத் தீண்டும் பொழுது...

விடியும் முன் சூரியன்,
உன் விழி இரண்டில் கண்டேன்...

உன் மொழி கேட்க்க,
தோற்றது என் கவி... "

என்னையும் அறியாமல் மனம் மொக்கை கவிதைகளை உளர ஆரம்பித்தது.
நெருங்கி வ‌ந்தால், " கோப‌ம் தீர்ந்த‌தா? " என்றேன்.
எதும் பேசாம‌ல் ம‌ண‌ப்ப‌ந்த‌லையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

மிக‌வும் அட‌மான பெண் போல‌ காட்டிக்கொள்ள‌ அவ‌ள் செய்த‌ முய‌ற்சிக‌ள் யாவும் என‌க்கு சிரிப்பையே வ‌ர‌வ‌லைத்த‌து.
கையில் மஞ்சள் அரிசியை எடிடுத்துக்கொண்டு, அவளை ஒரு முறை பார்த்தேன்.தூரதிலிருந்து எங்கள் மீது விழும் அவள் தோழிகளின் பார்வைகளை அலட்சியம் செய்தேன்.அவள் என் அருகில் என்னுடன் தனியாக நின்று கொண்டே மணப்பந்தலையும், சடங்குகளையும் கவனிப்பது போல் செய்த பாவனைகள் பிடித்திருந்தது.

"உன்கிட்ட ஒன்னு சொல்லனும்'‍ இது நான்

"ஹ்ம்ம்ம்ம்"

" அங்க பாரு அந்த லேசர் லைட்ல இருந்து வர வெளிச்சத்தை அந்த குழந்தைக பிடிக்க முயற்சி பண்றத"

" ம்ம்ம்ம்ம்? " என்ன என்று கேட்பது போன்ற பாவனையுடன்.

" இந்த மாதிரி லைஃப்ல நிறைய விசயங்களை நாம ரசிச்சாலும் எல்லாத்தையும் நம்மலால அடைய முடியாது..."

அவளிடம் ஆழ்ந்த மெளனமும் குழப்பமானா பார்வைகளும்.

"புரியலயே'

" நா இத சொல்ல வேண்டானுதான் நெனச்சேன், ஆனா சொல்லாம இருக்க முடியல, எனக்குனு ஒருத்தி எப்படியல்லாம் இருக்கனும்னு இதுவரைக்கு நெனச்சதில்லை...
ஆனா, உன்னப் பார்த்தற்கப்புறம் இப்படித்தான் இருக்கனும்னு ஆசைப்படறேன்"

அவள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருக்க செய்த முயற்சிகள் யாவும் தோல்வியைத் தழுவி, லேசான சந்தோசம் வெளிப்பட்டது.

"அதுக்கு?"

" அதுக்குனு நா உன்ன லவ் பண்றேனு சொல்லல"

மீண்டும் சின்ன குழப்பம் அவள் முகத்தில்...

" சொல்லியிருப்பேன், ஒரு வேளை அதோ அங்க நிக்கறாலே என் அத்தை பொண்ணு, அவளை எனக்குனு முடிவு பண்ணாம இருந்தா... நா சின்ன வயசா இருக்கும் போது இருந்தே அவ எனக்குனு முடிவு பண்ணிட்டாங்க. அவளும் என் மேல ஆசை வெச்சிருக்கா, இப்ப போய் நா எங்க அம்மாகிட்ட அவளை நான் கட்டிக்க முடியாதுனு சொன்னா அது நடக்காது. கொஞ்சம் யோசிச்சு பார்த்தேன், உங்கிட்ட அதிகமா பழகாமையே உன் பிரிவு எனக்கு இவ்வளவு வலி கொடுக்குதுனா, இத்தன வருசமா என்னையே நினச்சுருப்பாளே, அவளால இத தாங்கிக்க முடியுமானு... ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இத உங்கிட்ட சொல்லாம இருக்க முடியல அதான் சொல்லிட்டேன். We can't have all that we desire,but God will give us all that we deserve"
அடுத்த ஜென்மம் பற்றி தெரியாது இருந்தா நீ எனக்கு காதலியா வேணும்."

நான் சொல்லி முடிக்க முடிக்க அவள் முகம் வாடத்தொடங்கியிருந்தது. சட்டென எதுவும் சொல்லாமல் மணமகள் அரை நோக்கி சென்றால்.

அவள் உள்ளே சென்ற சிரிது நேரம் கழித்து, என் அத்தை பெண்ணிடம் நடந்ததை சொன்னேன்.

" உனக்கு விளையடரதுக்கு ஒரு அளவில்லையா, பாவம்தாண்டா வதனா" என்னைத்திட்டியவாரே மணமகள் அறை நோக்கிச் சென்றால், நானும் தொடர்ந்தேன்

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍-------------------------------------------------------------------------

கதவில் சாய்ந்தவாறு நான் நின்றுகொள்ள, கட்டிலில் முகம் புதைந்துபோன வதனா அருகில் என் அத்தை பெண் அமர்ந்து அவள் தோள்களைப் பற்றி,
" ஹே வதனா , இங்க பாரு, என்னாச்சு உனக்கு?'
" ஒன்னும் இல்லை" சமாளித்தபடி முகத்தை துடைத்தவாரே எழுந்தால், அவள் கண்கள் சிவந்து சற்றே வீங்கி இருந்தது, ஒப்பனைகள் எலலாம் கலைந்திருந்தது, அவளைப்பார்த்து புன்னகைத்த என்னிடம் இருந்து பார்வைகளை விலக்கினால்.
என் அத்தைப் பெண் அவள் முகத்தை திருப்பியபடி " அவ சொன்னதெல்லாம் நம்பிட்டியா? இவனப் போய் நான் கல்யாண பண்றதா" என்னைப்பார்த்து " போடா குண்டா..."

" அப்போ...." என்ற வதனாவை முடிக்க விடவாமல் " நீ எப்பவோ என் உயிரோடு கலந்துவிட்டாய் , வதனா..." என்றேன்.
கண்களை துடைத்தவாறு வேகமாக எழுந்து வந்து என் நெஞ்சில் குத்த உரைந்து போனேன், இரண்டாம் குத்தில் உயிர் பெற்றேன் , என் மார்போடு சாய்ந்தவளை என் உயிரோடு அனைத்துக்கொண்டேன்...

"ம்ம்ம்ம் கட்டி மேளம், கட்டி மேளம்" சத்தம் ஒலிக்க, டும் டும் டும் என மங்கள வாத்தியம் வேகமாக முழங்க, எங்கிருந்தோ அச்சதை எங்கள் மேல் வந்து விழுந்தது...


******** சுபம் ***********

மின்னலே நீ வந்ததேனடி - முதல் பயணம் II

அதிகாலையிலேயே அம்மா "அப்புறம் போலாம்"னு சொல்லியும் ,கேட்காமல் நண்பனைப் பார்க்க 20 கி.மீ , குளிரில் வண்டிய ஒட்டிட்டு வந்தது ஒன்றும் வீணாகப் போகவில்லை...

இப்படி சொந்தஊருக்கு வந்த நேரத்துல, இப்படி ஒரு சந்திப்பு மைசூர்ல பார்த்த அதே பொண்ணு வதனாவோட நடக்கும்னு நினைக்கக் கூட இல்ல...

அதிகாலையில, ஒருப்பக்கம் விசாலமாக கட்டப்பட்ட மாடி வீடுகளும், மறுப்பக்கம் கம்பிவேலி அங்கங்கே உடைந்து கிடக்கும் சின்ன மைதானமும், அதைத்தாண்டி தென்னைக் கீற்றினிடையே உதயமாகிக்கொண்டிருக்கும் சூரியனையும் ரசித்தபடி வண்டிய கோலப்பொடி டப்பா மீது மோதி நிறுத்த...

மனம் துள்ளிக்குதிக்க...

---------------------------------------------------------
அதிகாலை 6.00 am


சிதறிக்கிடந்த கோலப்பொடியை ஒரு முறைப் பார்த்துவிட்டு , அமர்ந்தபடியே என் பக்கம் தலையை திருப்பினால், ஒரு காலைக் கீழே ஊன்றி, மற்றொருக் காலை வண்டியிலேயே வைத்தப்படி அவளை நோக்கி "ஸாரி" என்றேன்.

எதும் பேசாமல் என்னையே கோபமாகப் பார்த்தாள், அவள் முகத்தில் ஏதோ யோசிப்பது தெரிந்தது. அனேகமாக அது என்னை மைசூரில் பார்த்ததைப் பற்றித்தான் இருக்கும்.

"கோபத்திலக் கூட அழகாத்தாண்டி இருக்கே" என எண்ணியவாறு "Excuse me, ஐ ம் ஷாரி" என்று மீன்டும் ஒரு முறை அழுத்தினேன்.

"உங்களை,, நீ நீங்க மைசூர் தானே ! நீங்களும் தமிழா!" - கேளுடி என எண்ணிக்கொண்ட நொடியில்

"இட்ஸ் ஒகே ! கவனத்தை வண்டியில வைங்க ! " - கோபமாக எழுந்தபடியே ...

"உன்னப் பார்த்ததுக்கபுறம் எப்படி!" - மெல்லியக் குரலில்

"என்ன சொன்னீங்க?"-கேட்காததுபோல் புருவத்தை உயர்த்தியபடியே

"எல்லா உண்மையைத் தான் சொன்னோம்!"- வேறுப்பக்கம் திரும்பியபடி, சாவியை திருகினேன் , வண்டியை ஸ்டார்ட் செய்வது போன்ற பாவனையுடன்.

லேஸாக முறைத்தபடி என்னையே பார்த்தாள்.

"ஸாரி,கோபப்பட்டலும் இத கண்டிப்பா நான் சொல்லித்தான் ஆகனும், நீங்க உண்மையிலேயே........."

"உண்மையிலேயே"

இதயம் high speed'ல துடித்தது, உடல் நீரின் கொதிநிலையைத் தாண்டியது.

எதாவது திட்டிட்டா?, "விட்றா மச்சா, நாம வாங்காத திட்டா?

வீட்ல இருந்து ஆள் கூப்பிட்ட?,"அப்பீட்டு"

அப்புறம் அவகிட்ட நா எப்படா பேசறது? " நல்ல யோசிச்சுக்கோ, எற்கனவே மிஸ் பண்ணீட்ட! ஏதாச்சு ப்ராப்லம்னா சாரி கேக்கற சாக்குல பேசிக்கலாம்"

சரி சொல்லித்தான் பாக்கலாமே! என்று ஒருமுடிவெடுத்தவாறு தலையை நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். எனக்கு நானே பேசிக்கிட்டிருந்த கோமலித்தனத்தை பார்த்தோ என்னவோ! மெல்லிய புன்னகை அவள் முகத்தில் பூத்திருந்தது. ஒரு கையைக் கட்டியவாரு,லேசான புன்னகையுடன், இடது கையையும், புருவங்களையும் ஒருசேர என்ன? என்பது போல அசைத்தாள்.

போலியாக தைரியத்தை வரவைத்துக்கொண்டு , இரு கைகளயும் சேர்த்து வண்டியின் மேல் மணிக்கட்டு படுமாறு சாய்ந்து,

"அழகாத்தான் இருக்கீங்க" என்றேன் மெல்லிய புன்னகையுடன்.

தீடீரென பின்னால் திரும்பி " அப்பா........" என்றாள்

"அய்யையோ" என்று அவசரமாக எழுந்து "உஸ் உஸ் ப்லீஸ் கத்தாதீங்க" என்றேன் வேகமாக இருக்கைகளையும் ஆட்டியபடி.

என் பக்கம் திரும்பியவள் குலுங்கியவாறு சிரித்தாள்...

"என்னடி ? அப்பா குளிச்சுட்டிருக்கார், என்ன வேணும்?" என்று வீட்டுக்குள் இருந்து ஒரு சத்தம் மட்டும்.

"ஒண்ணுலமா , சும்மாதா கூப்பிட்டேன்" - திரும்பாமலே கூறினால்...

முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் "மறுபடியும் பார்க்கலாம்" - வண்டியை வேகமாக செலுத்தினேன்.

சிறிது தூரம் வந்தபிறகு, ஒரு டீக்கடையில் வண்டியை நிறுத்தி ஒரு சிகெரெட்டும், டீ யும் வாங்கிக்கொண்டு நண்பனுக்கு கைப்பேசியில் அழைத்து வரச்செய்தேன்.
----------------------------------------------------------

விடியற்காலை 6.30 am

நண்பனிடம் சிறிது உரையாடி விட்டு, பிறகு முன்கதைச்சுருக்கம் கூறினேன்.

"மச்சா Browsing சென்டர் எங்கடா இருக்கு" என்றேன்.

"நம்ம காலேஜ் முன்னாடி இருக்குதுல்ல"

"இந்நேரத்துல திறந்திருக்குமா?"

"அவன் 7 மணிக்கெல்லாம் திறந்திருப்பான்"

நான் கல்லூரி படிப்பு முடித்த அதே ஊரில்தான் அவள் வீடும் இருந்தது. அதுவும் என் கல்லூரிக்கு சற்று பின்புறம் எனக்கு மிகவும் பரிச்சயமான வீதிகள்.

-------------------------------------------------------------
விடியற்காலை 7.15 am

பிரெளசிங் கிளம்பினோம். சர்வே எடுக்கும் அட்டவணை சீட்டு போன்ற பேப்பர்களை தயார் செய்து தேவையான பிரதிகள் எடுத்துக்கொண்டேன். அதில் தேவையில்லாத சில பெற்றோர், முகவரி, வேலை காலங்களுடன் கல்லூரி, பள்ளி, படிப்பு, உட்பிரிவு, பொழுதுபோக்கு, சிறப்புத்தகுதிகள் என தேவைப்பட்ட(எனக்கு) காலங்களையும் சேர்த்துக்கொண்டேன்.

"என்னடா அருண் பண்ணப்போற?"

"பொறுடா மச்சா"

--------------------------------------------------------------------

முற்பகல் 10.30 am

சரியாக அவள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி கணக்கெடுப்பை ஆரம்பித்தோம்.

---------------------------------------------------------------------
முற்பகல் 11.23 am

"டிர்ரிங்.. டிர்ரிங்.."

"யாரு ?", கதவு திறந்தபடியே, அவள் அம்மாவாக இருக்கலாம்.

"சர்வேங்க"

"உள்ள வாங்க, எலெக்சனுக்கா?"

"பரவால்லீங்க, "எலெக்சன் இல்லீங்க, இது காலேஜ் ப்ராஜக்ட்டுக்காக" போர்டிகோவில் நின்றபடி.

"அப்டியா? எந்த காலேஜ்?"

"நம்ம RVS தாங்க" பழைய ஐடி கார்டை காண்பித்தபடி, "வீட்ல எத்தன பேருங்க?" என ஆரம்பித்தேன்.

மாமனார், அத்தை, பாட்டி விபரங்கள் முடிந்து என் வீட்டுக்காரியின் முறை..

"பேரு" "வதனா"

"வயசு" "19"

"படிப்பு" " B.Sc, ரெண்டாம் வருஷம், இந்துஸ்தான் காலெஜ்"

" B.Scல என்ன?" "ஏதோ Viscomநு சொல்லுவா"

"சரிங்க, ரொம்ப நன்றி" "வரேன்"

(கண்டிப்பா வருவேன், ஆரத்தி கரச்சு வைங்க...)

மின்னலே நீ வந்ததேனடி - முதல் பயணம் I

பிள்ளையாரை வணங்கிவிட்டு திரும்பிய நான், அவளைக் கண்டவுடன் சற்று நேரம் அமர முடிவுசெய்தேன்.

பலூனை துரத்தி பிடித்துக்கொண்டிருக்கும் சிறுமியின் பாவாடைச் சட்டையின் அழகு, பூக்கடையிலிருந்து வரும் பூவாசம், பலூன்காரரின் சுருக்குப்பையிலிருந்து வரும் சில்லரைச் சத்தம், சிலுசிலுவென என்னை உரசிக்கொண்டிருந்த மாலைநேரத் தென்றல், கையில் இருந்த இனிய பொங்கலின் சுவையென, எதையும் உணரவிடாமல் என் ஐம்புலன்களையும் ஈர்த்துக்கொண்டவள் எதுவும் தெரியாதவள் போல நவகிரகங்களைச் சுற்றிக்கொண்டிருந்தாள்.

சிவப்பு தாவணி, என் தங்க நிறத்தவளுக்காகவே நெய்யப்பட்டது போலிருந்தது. அவள் நடைக்கேற்ப தாளம் போட்டுக்கொண்டிருந்த கொலுசின் ஒலியில் செவியையும், அவள் பாதங்களின் மென்மையில் பார்வையயும் செலுத்திய நான், யாரோ என் தோளில் கைவைப்பதையுணர்ந்து திரும்பினேன். லோகேஷ் நின்று கொண்டிருந்தான்.

புவனேஸ்வரில் தொடங்கிய நட்பு, "கிளம்புடா போலாம்" என்றான்.

இருடா என்று சொல்லிவிட்டு திரும்பினேன்.அவளை காணவில்லை, "ச்சே மிஸ் பண்ணிட்டியேடா" என மனம் சலித்துக் கொள்ள, அவளின் ஞாபகத்துடன் எழுந்து மீண்டும் ஒரு முறை பிள்ளையாரை வணங்கி விட்டு அவனுடன் பேருந்து நிறுத்தத்தை நோக்கிச்சென்றேன்.

----------------------------------------------------

வழக்கம் போல் படியோரம் கூட்டமாகவும், பின்புறம் காலியாகவும் இருந்த பேருந்தில் ஏறினோம்.

"சூர்யா பேக்கரி இரடு" என (இது கன்னட இரண்டுங்க) இருபது ரூபாய் நோட்டுக்கு பத்துரூபாய் மீதியை மட்டும் உடனே வாங்கிக் கொண்டேன்.

கொடுத்துவிட்டு அடுத்த நபரிடம் "டிக்கெட்! டிக்கெட்!" என கலைய முற்பட்ட கண்டக்டரிடம் நானும் டிக்கெட் என்றேன். "இரு தருகிறேன்" என்பதை ஒரே சைகையில் காட்டி விட்டு முன்னே சென்ற நடத்துனரின் மீதான பார்வை விடுபட்டு, அவளை நோக்கி மனம் ஓட ஆரம்பித்தது.

விசில் சத்தம் கேட்க, காலியான சீட்டில் இருவரும் அமர்ந்தோம். வழக்கம் போல் ஜன்னலோர சீட்டு எனக்கு.

ஜன்னலில் முழங்கையை வைத்து, உள்ளங்கையை கன்னத்தில் வைத்து, நகங்களை வருடியவாறு ஏதோ சிந்தனை (எல்லாம் அவளப்பத்தித்தான்) மனதில் ஓட மெல்ல கூட்டம் குறைந்து கொண்டிருந்தது.

ஒரு நிறுத்தத்தில் சத்தம் அதிகமாக படியோரம் கவனம் திரும்பியது. ஏகதேசம் பஸ்ஸிலிருந்த பாதி பேர் இறங்கலானார்கள்.

மேகக்கூட்டம் விலக, சூரியனின் இளஞ்செங்கதிர்ப் பட்டு தெறிக்கும், தொட்டி நீர் போலானது என் மனம். அவளும் இதே பஸ்ஸில் நிற்பதைக் கண்டதும்.

"ஒருமுறையேனும் என்னைப் பாருடி" என மனதில் நினைத்துக் கொண்டே, என் விழிகளை அவள் மீது பதித்தேன்.

"பஸ்ஸ மெதுவா ஓட்டுயா" என டிரைவரைப் பார்த்துச் சொல்ல தோணிற்று. ஐம்புலன்களும் அடங்கிப் போக அமைதியாய் இருந்தேன்.

மையிட்ட அழகிய கண்கள், சின்னதாய் காதில் சிணுங்கிய ஜிமிக்கி, மெலிதான புன்னகை, மஞ்சளும், தங்கமும் கலந்த நிறம், நீள்வட்ட முகம் என ஒவ்வொரு அம்சமும் என்னைத் தோற்கடித்துக் கொண்டிருக்க, "வதனா, சீக்கிர இறங்கு" என ஒருத்தி அவள் கையைப்பிடித்து அவசரமாய் இழுக்க, செய்வதறியாது திகைத்தேன்.

படியில் இறங்கும் போது, ஒரு கையை தோழி இழுக்க, கடைக் கண்ணால் என் மீது ஒரு மின்னலை வீசிவிட்டு, அவள்பாட்டுக்கு இறங்கிவிட்டாள்.

திடீரென பஸ்ஸில் ஏறிய மூன்று பேரில் காக்கி, வெள்ளை உடையணிந்த ஆள், கண்டக்டரின் கையிலிருந்த கருவியை அவசரமாய் பிடுங்கி அருகிலிருந்த இன்னொருவரிடம் கொடுக்க, அவர் அதில் எதையோ நோண்டி விட்டு, நோட்டில் ஏதோ எழுதினார்.
இன்னொருவர் "டிக்கெட்! டிக்கெட்!" என ஒவ்வொருவரிடமும் வரிசையாக சரிபார்த்துக் கொண்டு வரும்போதுதான் உணர்ந்தேன், கண்டக்டர் இன்னமும் எனக்கு டிக்கெட் தரவில்லையென்பதை.



"டிக்கெட்" எங்களிடம் கேட்க, "துட்டு கொட்டாய்த்து, டிக்கெட் பரில்லா" (காசு கொடுத்தாச்சு, டிக்கெட் தரல) என கன்னடத்தில் லோகேஷ் கூற, நான் செக்கரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"சார்! இங்க ரெண்டு, Total எட்டு" என சொன்னவாறு ஒரு பேப்பரை நீட்டி"சார்! இதுல ஒரு கம்ப்ளைண்ட் கொடுங்க" என எங்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்று விட்டார்கள்.

அதன் பிறகு தான் தெரிந்தது அந்த கண்டக்டர் இன்னும் ஆறு பேருக்கு டிக்கெட் தரவில்லையென்று.

"ஹப்பா!" என பெருமூச்சு விட்டவாறு எனது நிறுத்தம் வர லோகேஷுடன் வீட்டை நோக்கி நடந்தேன்.



மனது முழுக்க அவள் நினைவுகளுடன், வாய் மெலிதாய் உச்சரித்தது அவள் பெயரை "வதனா